தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கம்


தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கம்
x
தினத்தந்தி 13 Aug 2018 8:34 PM GMT (Updated: 13 Aug 2018 8:34 PM GMT)

தாம்பரம்-செங்கோட்டை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணைப்படி, தாம்பரம்-செங்கோட்டை இடையே இருமார்க்கமாகவும் தினசரி அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16189), இரவு 10.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (16190), இரவு 10.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

தினசரி இயக்கப்படும் இந்த ரெயில் 16 முன்பதிவில்லா பெட்டிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ரெயில் இயக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Next Story