தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்


தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்
x
தினத்தந்தி 14 Aug 2018 5:08 AM GMT (Updated: 14 Aug 2018 5:08 AM GMT)

தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது  க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர்  திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் பங்கேற்பு.

திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பு. தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் அதிகரித்ததால் அரங்கம் நிரம்பி வெளியே நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர். அவர்கள் வசதிக்காக எல்இடி டிவிகள் வைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்து குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் அது வெளிப்படையாக இன்று தெரிவிக்கப்படாது.

பொதுக்குழுவை என்று கூட்டுவது என்பது குறித்தும் இன்று முடிவெடுக்கப்படலாம் என தெரிகிறது.

மு.க.அழகிரி பேட்டிகளுக்கு திமுக சார்பில் யாரும் பதில் அளிக்க தேவையில்லை என இக்கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

Next Story