மு.க.ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டு அணிவித்த நடிகர் பார்த்திபன்


மு.க.ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டு அணிவித்த நடிகர் பார்த்திபன்
x
தினத்தந்தி 25 Aug 2018 8:31 PM GMT (Updated: 25 Aug 2018 8:31 PM GMT)

கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் நடிகர் பார்த்திபன் பேசியபோது, மு.க.ஸ்டாலின் ஏதோ சோகத்தில் இருப்பது போன்று காட்சியளிக்கிறார் என்று என்னிடம் ராதாரவி கூறினார்.

கோவை, 

கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் நடிகர் பார்த்திபன் பேசியபோது, மு.க.ஸ்டாலின் ஏதோ சோகத்தில் இருப்பது போன்று காட்சியளிக்கிறார் என்று என்னிடம் ராதாரவி கூறினார். அந்த சோகத்தை தீர்க்க நான் வரும்போது ஒரு ‘டானிக்’ வாங்கி வந்துள்ளேன். அந்த டானிக்கை, உங்கள் அனைவரின் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு மேடையில் வைத்து அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது மிகப்பெரிய டானிக்காக இருக்கும். எனவே தயவு செய்து மு.க.ஸ்டாலின் மேடைக்கு வர வேண்டும் என்று கூறி, மு.க.ஸ்டாலினை மேடைக்கு அழைத்தார். உடனே மு.க.ஸ்டாலினும் மேடைக்கு சென்றார்.

அப்போது பார்த்திபன் திடீரென்று ஒரு கவரில் இருந்து மஞ்சள் நிற துண்டை எடுத்து மு.க.ஸ்டாலினுக்கு அணிவித்தார்.

அப்போது அங்கு நிறைந்திருந்த தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து பார்த்திபன் பேசும்போது, நான் ஏதோ அரசியலில் நுழைந்து அரசியல் செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் கோடி வார்த்தை பேசுவதை விட நான் மு.க.ஸ்டாலினுக்கு அணிவித்த மஞ்சள் துண்டு அதிக விஷயங்களை தெளிவுபடுத்தும். மஞ்சள் துண்டு குறித்து நான் பேச வேண்டியது இல்லை. அதன் மகிமை உங்கள் அனைவருக்குமே தெரியும் என்று கூறினார்.

Next Story