அருண் ஜெட்லியிடம் விஜய் மல்லையா பேசியது என்ன? மக்களுக்கு விளக்கிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அருண் ஜெட்லியிடம் விஜய் மல்லையா பேசியது என்ன? என்பது மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–
வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம் பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது.
பிரதமர், அந்த ரகசிய பேச்சு வார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும். இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story