பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக கவர்னர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் திருமாவளவன் குற்றச்சாட்டு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில் வருமாறு:-
7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். எனவே தமிழக அரசு மீண்டும் அமைச்சரவையை கூட்டி கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அப்போது அவர் அதனை ஏற்று தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story