இறுதிப்போர் குறித்து ராஜபக்சேவே சொல்லி விட்டார், இனி பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா? - பொன்.ராதாகிருஷ்ணன்


இறுதிப்போர் குறித்து ராஜபக்சேவே சொல்லி விட்டார், இனி பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா? - பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 26 Sep 2018 5:05 AM GMT (Updated: 26 Sep 2018 5:05 AM GMT)

இறுதிப்போர் குறித்து ராஜபக்சேவே சொல்லி விட்டார், இனி பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா? என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

7 பேரின் விடுதலையை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்.  7 பேரின் இந்த நிலைக்கு காங்கிரசும், திமுகவும் தான் காரணம். 7 பேரை விடுவிக்க கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.  இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதில் என்ன?  7 பேரை விடுவிக்க கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டது. இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதில் என்ன?.

தமிழக அமைச்சர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். மாண்பை காப்பாற்ற வேண்டும். நானும் அதிமுக  அரசை விமர்சிக்கிறேன் எனது நாக்கையும்  அறுப்பார்களா?  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story