பெரிய குளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை


பெரிய குளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு  தூக்கு தண்டனை
x

தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

தேனி

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  தேனி மாவட்டம் பெரிய குளத்தில்  10 வயது சிறுமி ஒருவர் மாயமானார். பின்னர் அவரது உடல்  கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது. விசாரணையில்  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யபட்டது தெரியவந்தது. இது குறித்த வழக்கு  தேனிமாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது.  இந்த வழக்கில் குற்றவாளிகள்  சுந்தர் ராஜ், ரூபின் குமரேசன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டது. மேலும்  10 வயது சிறுமியின் தாயாருக்கு கருணைத்தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Next Story