பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் வாகன ஓட்டிகள் நிம்மதி


பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் வாகன ஓட்டிகள் நிம்மதி
x
தினத்தந்தி 20 Oct 2018 9:45 PM GMT (Updated: 20 Oct 2018 5:42 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது.

சென்னை, 

பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

கடந்த 5–ந்தேதி ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 63 காசு குறைந்து ஒரு லிட்டர் 84 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டீசலும் கடந்த 5–ந்தேதி லிட்டருக்கு 2 ரூபாய் 78 காசு குறைந்து, 77 ரூபாய் 11 காசுக்கு விற்பனை ஆனது.

அதன்பின்னர், தொடர்ந்து பெட்ரோல்–டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 18–ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசு குறைந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 88 காசுக்கு விற்பனை ஆனது. நேற்று முன்தினமும் அதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மீண்டும் விலை குறைந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 66 காசு குறைந்து, 85 ரூபாய் 22 காசுக்கு விற்பனை ஆனது.

பெட்ரோல் விலையை போலவே, டீசல் விலையும் கடந்த 18–ந்தேதி குறைந்தது. நேற்றும் விலை குறைந்தே காணப்பட்டது. லிட்டருக்கு 24 காசு குறைந்து, ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகத்தில் இருப்பதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story