திருச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து


திருச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 6 Nov 2018 12:51 AM GMT (Updated: 6 Nov 2018 12:51 AM GMT)

திருச்சியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

திருச்சி,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமுடன் இன்று கொண்டாடப்படுகிறது.  பொதுமக்கள் தீபாவளிக்காக காலையில் எழுந்து குளித்து, பூஜை செய்து, புது ஆடைகளை உடுத்தி, தயார் செய்த பலகாரங்களை பகிர்ந்து உண்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடித்து மகிழ்வது வழக்கம்.  இந்த நிலையில், திருச்சி உறையூரில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையின் 5க்கும் கூடுதலான வாகனங்களில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story