கடலூரில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
கடலூரில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் மஞ்சக்குப்பம் விவேகானந்தா அவென்யூவை சேர்ந்தவர் கோபிநாதன்(வயது29) என்ஜினீயர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி சில தினங்களுக்கு இறந்தார். இந்தநிலையில் கடலூரில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார்.
கடலூர் முதுநகர் பனங்காட்டு காலனி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ்(வயது 33). இவர் கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
இந்தநிலையில் விமல்ராஜூக்கு திடீரென காய்ச்சல் அதிகமானதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததோடு, அவரது ரத்த மாதிரியையும் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் விவேகானந்தா அவென்யூவை சேர்ந்தவர் கோபிநாதன்(வயது29) என்ஜினீயர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி சில தினங்களுக்கு இறந்தார். இந்தநிலையில் கடலூரில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார்.
கடலூர் முதுநகர் பனங்காட்டு காலனி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ்(வயது 33). இவர் கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
இந்தநிலையில் விமல்ராஜூக்கு திடீரென காய்ச்சல் அதிகமானதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததோடு, அவரது ரத்த மாதிரியையும் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
Related Tags :
Next Story