சர்கார் படத்தில் விலையில்லா பொருட்களை எரிப்பது அரசை அவமதிக்கும் செயல் - அமைச்சர் சி.வி.சண்முகம்


சர்கார் படத்தில் விலையில்லா பொருட்களை எரிப்பது அரசை அவமதிக்கும் செயல் - அமைச்சர் சி.வி.சண்முகம்
x
தினத்தந்தி 7 Nov 2018 1:45 PM GMT (Updated: 7 Nov 2018 1:45 PM GMT)

சர்கார் படத்தில் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருப்பது, அரசை அவமதிக்கும் செயல் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திருப்போரூரில் செய்தியார்களிடம் கூறியதாவது:

சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருப்பது, அரசை அவமதிக்கும் செயல். நடிகர் விஜய், பட தயாரிப்பாளர் மற்றும் படத்தை திரையிட்ட திரை அரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story