கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்


கஜா புயல் இன்று  மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 15 Nov 2018 3:36 AM GMT (Updated: 15 Nov 2018 3:36 AM GMT)

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இந்த புயலானது பாம்பன் கடலூர் இடையே நாகை அருகே கரையைக்கடக்கும் என்று தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. 

காலை 8.30 மணி நிலவரப்படி, மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல்,  14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் மணிக்கு 14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

சென்னைக்கு  தென்கிழக்கே  370 கி.மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே  370 கி.மீட்டர் தொலைவிலும் கஜா புயல் உள்ளது. கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையைக்கடக்கும். 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும்”  இவ்வாறு  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story