கஜா புயல் போர்க்கால நடவடிக்கை: தமிழக அரசுக்கு குவியும் பாராட்டுக்கள்
கஜா புயல் பாதிப்பில் போர்க்கால நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் பாராட்டு தெரிவித்து உள்ளன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்து உள்ளார். தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் பாராட்டுகள்; பாதுகாப்புப் பணிகள் தொடர வேண்டும் என கூறி உள்ளார்.கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு
— M.K.Stalin (@mkstalin) November 16, 2018
மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தமிழக அரசு, அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு என் பாராட்டுக்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.கஜா புயலினால்,பாதிக்கப்பட்ட மக்கள்அனைவருக்கும்,நாம்அனைவரும்..நம்மாலான உதவிகளைச்செய்யவேண்டும்,புயல்எச்சரிக்கை..வந்தகாலத்திலிருந்து முன்னெச்செரிக்கைநடவடிக்கைகள்மேற்கொண்டமுதல்வருக்கும்..@CMOTamilNadu களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் எனது பாராட்டுகள்.பாதுகாப்பு பணிகள் தொடரவேண்டும்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 16, 2018
கஜா புயலுக்கு தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.
— Kamal Haasan (@ikamalhaasan) November 16, 2018