தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு


தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
x
தினத்தந்தி 18 Nov 2018 10:30 AM GMT (Updated: 18 Nov 2018 10:30 AM GMT)

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை,

கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் விழுந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நாட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கும் பணியில் அரசும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே உதவிகள் கிடைக்கவில்லை என்று பல்வேறு பகுதிகளில் மக்கள் கோபமும் கொண்டுள்ளனர். இந்நிலையில் புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் கிர்லோஷ் குமார் உத்தரவை பிறப்பித்துள்ளார். 


Next Story