முதல்வர் ஓடி ஒளிந்து கொள்வதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
முதல்வர் ஓடி ஒளிந்து கொள்வதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:-
புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். புயல் பாதித்த பகுதிக்கு முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக ஏன் செல்லவில்லை? முதல்வர் ஓடி ஒளிந்து கொள்வதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இருப்பதற்கான காரணத்தை முதலமைச்சர் பழனிசாமி விளக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களை மழை காரணமாக முதலமைச்சர் சந்திக்க முடியவில்லை என்றால் அங்கேயே தங்கி சந்திக்க வேண்டியது தானே.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை முதலமைச்சர் சந்திக்காததற்கு காரணம் என்ன? ஆளுங்கட்சிக்காரர்களுக்கு மட்டும் நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் நாடகம் ஆடுகிறார்.
தி.மு.க சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என கூறினார்.
Related Tags :
Next Story