இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்


இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 21 Nov 2018 7:02 AM GMT (Updated: 21 Nov 2018 7:02 AM GMT)

இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:- 
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும், கடந்த, 24 மணி நேரத்தில், கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் பகுதிகளில், ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. 

அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம்,புதுச்சேரியில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும். மீனவர்கள் இன்று தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா கடலுக்கு செல்ல வேண்டாம்” என்றார். 


Next Story