கனமழை எதிரொலி: திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், புதுச்சேரி, நாகை ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர்கள் அறிவிப்பு


கனமழை எதிரொலி: திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், புதுச்சேரி, நாகை ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 4:41 PM GMT (Updated: 21 Nov 2018 4:50 PM GMT)

கனமழை எதிரொலியாக, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், புதுச்சேரி, நாகை ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.

சென்னை,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கனமழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காற்றுடன் மிதமாக பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், புதுச்சேரி,  நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.



Next Story