மனிதாபிமானம் கருதி பிரதமர் இங்கு வந்து பார்வையிட்டால் அரசு சக்கரம் வேகமாக சுழலும் - கமல்ஹாசன்


மனிதாபிமானம் கருதி பிரதமர் இங்கு வந்து பார்வையிட்டால் அரசு சக்கரம் வேகமாக சுழலும் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 23 Nov 2018 8:43 AM GMT (Updated: 23 Nov 2018 8:43 AM GMT)

மனிதாபிமானம் கருதி பிரதமர் இங்கு வந்து பார்வையிட்டால் அரசு சக்கரம் வேகமாக சுழலும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கஜா புயல் சீரமைப்பு பணிகளில் அரசின் வேகம் போதாது. துரிதப்படுத்த வேண்டும். முதலமைச்சர் பழனிசாமி ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதித்த பகுதிகளை பார்த்தது, தூரத்து பார்வையாகவே உள்ளது. 

புயல் பாதித்த இடங்களை பிரதமர் மோடி நேரில் பார்வையிட வேண்டும். மனிதாபிமானம் கருதி பிரதமர் இங்கு வந்து பார்வையிட்டால் அரசு சக்கரம் வேகமாக சுழலும். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் புயல் பாதித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக இருந்திருக்கலாம்; ஆனால் அதையும் தாண்டி பாதிப்பு உள்ளது. சிமெண்டில் அமைக்கப்பட்ட மின்கம்பம் கூட சேதமடைந்துள்ளது; சிமெண்டில்கூட குறை இருந்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story