ஈரோடு அந்தியூர் அருகே கயிறு ஆலையில் தீ விபத்து; 2 பேர் பலி


ஈரோடு அந்தியூர் அருகே கயிறு ஆலையில் தீ விபத்து; 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 Nov 2018 9:55 AM GMT (Updated: 25 Nov 2018 9:55 AM GMT)

ஈரோட்டில் அந்தியூர் அருகே கயிறு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரோடு,

ஈரோட்டில் அந்தியூர் அருகே அத்தாணியில் கயிறு ஆலை ஒன்று அமைந்து உள்ளது.  இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதனை அடுத்து அங்கிருந்த சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே பலியானார்.  பெரியசாமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.  மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story