நாகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல் அமைச்சர் பழனிசாமி
நாகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக நிவாரண உதவிகளை முதல் அமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
நாகை,
கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், பயிர்கள் நாசமாகியுள்ளதால் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி, இன்று காலை ரயில் மூலமாக நாகைக்கு வந்தார். கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அவர், நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயலால் பாதித்த மக்களுக்கு முதற்கட்டமாக நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்கினார்.
Related Tags :
Next Story