ஆண்கள் மட்டுமே வரக்கூடிய அரசியலில், பெண் சிங்கமாக செயல்பட்டவர் ஜெயலலிதா - அமைச்சர் செல்லூர் ராஜூ


ஆண்கள் மட்டுமே வரக்கூடிய அரசியலில், பெண் சிங்கமாக செயல்பட்டவர் ஜெயலலிதா - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 5 Dec 2018 4:13 PM GMT (Updated: 5 Dec 2018 4:13 PM GMT)

ஆண்கள் மட்டுமே வரக்கூடிய அரசியலில், பெண் சிங்கமாக செயல்பட்டவர் ஜெயலலிதா என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

சென்னை,

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:

எப்போதும் குறை கூறும் ஸ்டாலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டினார். தற்போது மாற்று சிந்தனையோடு ஸ்டாலின் இருக்கிறார். 
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தான் ஸ்டாலின், அரசை விமர்சனம் செய்கிறார். 

இந்திய அரசியலில் துணிச்சல்மிக்க தலைவராக விளங்கியவர் ஜெயலலிதா. அரசியலில் எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஜெயலலிதா பின்வாங்கியது இல்லை. ஆண்கள் மட்டுமே வரக்கூடிய அரசியலில் பெண் சிங்கமாக தனித்துவம் வாய்ந்தவர் ஜெயலலிதா.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story