வைகோவின் கோபம், என் மீதா? வன்னி அரசு மீதா? - திருமாவளவன்
வன்னி அரசு வெளியிட்ட கருத்து மற்றும் வைகோ பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
அம்பேத்கரின் 62ஆம் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். சென்னை வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மலர்தூவி திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வைகோ பற்றி வன்னி அரசு பதிவு செய்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல. வன்னி அரசு சர்ச்சைக்குள்ளான பதிவை நீக்கி விட்டார். தனது வருத்தத்தையும் பதிவு செய்து விட்டார்.
வைகோவின் கோபம் என் மீதா, இல்லை வன்னிஅரசு மீதா? எதிர்ப்பை நேரடியாக பதிவு செய்வதை தவிர நான் யாரையும் தூண்டி விடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். வன்னி அரசு வெளியிட்ட கருத்து மற்றும் வைகோ பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story