காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் - அமைச்சர் ஜெயக்குமார்


காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 6 Dec 2018 7:23 AM GMT (Updated: 6 Dec 2018 7:23 AM GMT)

காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு முழுமையாக மொட்டையடித்தவர்கள் வரிகொடா இயக்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. வரிகொடா இயக்கம் என்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. 

காவிரி உரிமையை பெற்றது அதிமுக அரசு. மாநில உரிமையை எந்த விதத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது.

மத்திய அரசு மீது, தமிழக அரசு 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடர்ந்துள்ளது. திமுக எத்தனை வழக்குகள் தொடர்ந்துள்ளது?  என கேள்வி எழுப்பினார்.

எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என காவிரி, மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். தி.மு.க கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தல் நேரத்தில் கூட்டணி எல்லாம் சிதறி விடும் என கூறினார்.

Next Story