ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி


ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
x
தினத்தந்தி 8 Dec 2018 1:53 PM GMT (Updated: 8 Dec 2018 1:53 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.

கோவை,

கோவையில் ரூ.295 கோடி மதிப்பீட்டில் சேலம்-கொச்சின் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளன.  இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.  இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவதால் விபத்துகள் குறையும்.  கோவையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அவரிடம், தூத்துக்குடியில் அமைந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  இதற்கு பதிலளித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது என கூறினார்.

Next Story