மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது, மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை -தமிழிசை சவுந்தரராஜன்
மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது, மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை என தமிழக பாரதீயஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
சென்னை
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ,தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் முடிந்து, இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் , சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாரதீயஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
எந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது, வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்க மாட்டோம், தோல்வியடைந்தால் துவள மாட்டோம். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.
பாஜக மோசமான தோல்வியை அடையவில்லை, வெற்றிக்கும், தோல்விக்கும் ஒருசில தொகுதிகளே வித்தியாசம். இது ஒரு வெற்றிகரமான தோல்வி.
மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது, மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை.
இதுநாள் வரை வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளது என கூறிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story