ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது -முதலமைச்சர் பழனிசாமி பேட்டி


ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது -முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2018 5:51 AM GMT (Updated: 15 Dec 2018 5:51 AM GMT)

ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- “இந்தியாவிலேயே 2-வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது. சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு 11% பேர் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 89% பேர் ஆதரவாக உள்ளனர். 

யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.

Next Story