'பெய்ட்டி' புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்


பெய்ட்டி புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 16 Dec 2018 10:03 AM GMT (Updated: 16 Dec 2018 10:03 AM GMT)

'பெய்ட்டி' புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

பெய்ட்டி புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

சென்னைக்கு தென் கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 16 கி.மீ வேகத்தில் நகரும் பெய்ட்டி புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும். 

பெய்ட்டி புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திரா-புதுச்சேரி மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story