"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" உயர்நீதிமன்றம் உத்தரவு


சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம்  உத்தரவு
x
தினத்தந்தி 17 Dec 2018 10:22 AM GMT (Updated: 17 Dec 2018 10:22 AM GMT)

"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சட்டவிரோதமாக கருங்கல் வெட்டி எடுத்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.  அப்போது "சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. இயற்கை சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காததை சகித்து கொள்ள முடியாது என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள், செல்வாக்கு மிகுந்தவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து செயல்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.  நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

Next Story