மேகதாது விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கின்றன - பொன்.ராதாகிருஷ்ணன்
மேகதாது விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கின்றன என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் கலந்து கொள்வது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. உயர்மின் கோபுர விவகாரம் மத்திய அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
திமுக-காங். கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கவுள்ளது. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தபோது கொள்ளை அடிக்க முடியவில்லை. மேகதாது விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் நவராத்திரி சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story