வாட்ஸ்-அப்பில் வெளியான உரையாடலால் பரபரப்பு: “இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்


வாட்ஸ்-அப்பில் வெளியான உரையாடலால் பரபரப்பு: “இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்
x
தினத்தந்தி 25 Dec 2018 2:45 AM IST (Updated: 25 Dec 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

வாட்ஸ்-அப்பில் வெளியான உரையாடலால் பரபரப்பு: “இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ‘குடும்ப பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுக்க சென்ற என்னுடைய மனைவி, தற்போது போலீஸ் இன்ஸ்பெக்டரின் பிடியில் உள்ளார். அவரை மீட்டுத்தர வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே அந்த இளம்பெண், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேசிய உரையாடல் தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் “அந்த பெண் போலீஸ் நிலையத்துக்கு வெளியில் இருந்து பேசுகிறேன், தனது செல்போனை கணவர் பிடுங்கி உடைத்து விட்டதால், மற்றொருவரிடம் இரவலாக செல்போனை கேட்டு வாங்கி வந்து பேசுகிறேன்” என்று கூறுகிறார். அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் “நீ சாலையில் தனியாக நடந்து செல், நான் காரில் வந்து தனியாக உன்னை அழைத்து செல்கிறேன்” என்று கூறுவது பதிவாகி உள்ளது.

Next Story