பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் - அமைச்சர் வேலுமணி


பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் - அமைச்சர் வேலுமணி
x
தினத்தந்தி 26 Dec 2018 2:48 PM GMT (Updated: 26 Dec 2018 2:48 PM GMT)

பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

டெல்லியில்  மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்த பின் அமைச்சர் வேலுமணி செய்தியார்களிடம் கூறியதாவது:

கஜா புயல் நிவாரண நிதி, உள்ளாட்சி அமைப்புக்கான நிதி பற்றி பேசவே டெல்லி வந்துள்ளோம்.  வேளாண் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதால் அதிக நிதி கேட்டுள்ளோம். 

தேவையான நிதியை பெற்றுத்தருமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தோம். மத்திய அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.  பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும்.  மேகதாது அணை கட்ட விடமாட்டோம்; கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story