ஜல்லிக்கட்டு போட்டி : அதிகாரப்பூர்வ தேதி வெளியீடு உற்சாகத்தில் கா(ளை)யர்கள்


ஜல்லிக்கட்டு போட்டி : அதிகாரப்பூர்வ தேதி வெளியீடு  உற்சாகத்தில் கா(ளை)யர்கள்
x
தினத்தந்தி 27 Dec 2018 5:37 PM GMT (Updated: 27 Dec 2018 5:37 PM GMT)

பொங்கலையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி எந்தெந்த தேதிகளில் எங்கு நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

பொங்கலையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி எந்தெந்த தேதிகளில் எங்கு நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 
இதன்படி, வருகிற ஜனவரி 17 ம் தேதி, புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஜனவரி 15 -ல் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும், ஜனவரி 16 - ல் பாலமேட்டிலும், ஜனவரி 17 - ல் புகழ் பெற்ற அலங்கா நல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.

மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள், ஓரிரு நாளில் முழு வீச்சில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம், துள்ளிக்குதிக்கும் காளைகளை அடக்க, காளையர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். 

Next Story