தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை: வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24 % குறைவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24 சதவீதம் குறைவு. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை 24 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. வடகிழக்கு பருவமழை பதிவான அளவு 34 செ.மீ. இது வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைந்துள்ளது. வானிலை நிகழ்வுகள் சாதகமாக இல்லாததே பருவமழை குறைவுக்கு காரணம் . எல் நினோ உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தள்ளிப்போனதால் மழை இல்லை. 4 புயல்களில் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்பட்டது. அதனாலேயே மழையின் அளவு குறைந்து உள்ளது.
சென்னையில் இயல்பைவிட 55 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளது என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story