திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பால் அச்சத்திலும் பதற்றத்திலும் தி.மு.க. இருக்கிறது; அ.தி.மு.க.


திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பால் அச்சத்திலும் பதற்றத்திலும் தி.மு.க. இருக்கிறது; அ.தி.மு.க.
x
தினத்தந்தி 5 Jan 2019 6:33 AM GMT (Updated: 5 Jan 2019 6:33 AM GMT)

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பால் அச்சத்திலும் பதற்றத்திலும் தி.மு.க. இருக்கிறது என அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் பற்றி அனைத்து கட்சியினரின் கருத்துகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பால் அச்சத்திலும் பதற்றத்திலும் தி.மு.க. இருக்கிறது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தோல்வி பயத்தால் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story