555 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மக்கள் பயன்பாட்டிற்காக 555 புதிய பேருந்துகளின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், 140 கோடி ரூபாய் மதிப்பில், 555 புதிய பேருந்துகளின் சேவையை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய பேருந்துகளில் அகலப்படுத்தப்பட்ட படிக்கட்டுகள், ஒலிப்பெருக்கி வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு இடவசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புறநகர் பகுதியில் இயக்கப்பட உள்ள பேருந்துகளில் அரசின் 10 ரூபாய் குடிநீர் பாட்டில் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story