ரூ.89 கோடிக்கு பணப்பட்டுவாடா-எந்த ஆவணத்தையும் நாங்கள் வெளியிடவில்லை-வருமான வரித்துறை அறிக்கை தாக்கல்


ரூ.89 கோடிக்கு பணப்பட்டுவாடா-எந்த ஆவணத்தையும் நாங்கள் வெளியிடவில்லை-வருமான வரித்துறை அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 10 Jan 2019 6:34 AM GMT (Updated: 10 Jan 2019 7:43 AM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

சென்னை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வருமான வரித்துறை  அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. ரூ. 89 கோடிக்கு பணப்பட்டுவாடா நடந்தது என நாங்கள் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை. 

வருமான வரித்துறை சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்கள் மிகவும் ரகசியமானவை. சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் கைப்பற்றப்பட்ட எந்த ஆவணங்களையும் வெளியிடவில்லை.  சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை இதுவரை வெளியிட்டதில்லை ; இனியும் வெளியிட மாட்டோம் என பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.

Next Story