சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைகளில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.8 கோடி தங்கம் ; 2 பெண்கள் கைது


சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைகளில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.8 கோடி  தங்கம் ; 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 12 Jan 2019 8:11 AM GMT (Updated: 12 Jan 2019 8:11 AM GMT)

ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த தென்கொரியாவைச் சேர்ந்த 2 பெண்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

சென்னை

ஹாங்காங்கில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களை சோதனையிட்டபோது, அவர்கள் உள்ளாடைகளில்  வைத்து 24 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த 2 பெண்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் சென்னையில் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள்? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் இருக்கும். 

Next Story