தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினை சந்தித்து சக்தி பெண்கள் அமைப்பு மனு
தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி மு.க. ஸ்டாலினை சந்தித்து சக்தி பெண்கள் அமைப்பு மனு அளித்தனர்.
சென்னை,
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சக்தி பெண்கள் அமைப்பினர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதுபற்றி அந்த அமைப்பின் நிறுவனர் ராதாகிருஷ்ணமூர்த்தி கூறும்பொழுது, தொடர்ந்து அ.தி.மு.க. கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய கட்சி தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக வரும் பிப்ரவரியில், சக்தி அமைப்பின் சார்பாக, டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story