உரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் ஐக்கியமான கிளி
கோவை அருகே பாசமாக வளர்த்த கிளியை உரிமையாளர் திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெலியேறி அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று கருவறைக்குள் ஐக்கியமாகி விட்டது.
கோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் ஒரு கிளியை வளர்த்து வந்தார். இந்நிலையில் உரிமையாளர் முருகேஷ் தான் பாசமாக வளர்த்து வரும் கிளியை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்ட கிளி அவரது வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று கருவறைக்குள் ஐக்கியமாகி விட்டதது. இதனை கண்டு, அப்பகுதி மக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story