துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பொங்கல் வாழ்த்து


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பொங்கல் வாழ்த்து
x
தினத்தந்தி 14 Jan 2019 6:35 PM GMT (Updated: 14 Jan 2019 6:35 PM GMT)

அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சூரிய கடவுளுக்கு நன்றி சொல்லும் இந்த பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே பாரம்பரிய முறைப்படி கொண்டாடுகின்றனர்.

இந்தியாவின் மற்ற இடங்களிலும் வெவ்வேறு பெயர்களின் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் பொங்கல், சங்ராந்தி, விஷூ என்ற பெயர்களின் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகைக்கு வரலாற்று மற்றும் மத ரீதியான முக்கியத்துவம் உள்ளது.

இந்தப் பண்டிகையை முன்னிட்டு, நமது பெருமை மிகுந்த கலாசாரம், பாரம்பரியம், மரபுகள், கலை மற்றும் பண்டிகைகளை பாதுகாப்பதற்கு நாம் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story