தமிழகம் முன்னேற எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவே காரணம் -எடப்பாடி பழனிசாமி


தமிழகம் முன்னேற எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவே காரணம் -எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 16 Jan 2019 6:25 AM GMT (Updated: 16 Jan 2019 6:34 AM GMT)

தமிழகம் முன்னேற எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவே காரணம் என எம்ஜிஆர்- ஜெயலலிதா மணிமண்டப திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்

சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மணிமண்டபத்தில்  அமைக்கப்பட்டு உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச்சிலைகளையும் முதல்வர் திறந்துவைத்தார்.

சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயரை முதல்வர் பழனிசாமி  சூட்டினார்.

பின்னர் விழாவில் பேசும்போது அவர் கூறியதாவது;-

எத்தனை தடைகள் வந்தாலும் மக்கள் துணையோடு தகர்த்தெறிந்து நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம். தமிழகம் முன்னேற எம்.ஜி.ஆர். -ஜெயலலிதாவே காரணம் என்று கூறினார்.

அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு மகுடஞ்சாவடியில் இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.138 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

Next Story