மாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத காங்கிரசால் மத்தியில் எப்படி ஆட்சியமைக்க முடியும்? -தமிழிசை கேள்வி
மாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத காங்கிரசால் மத்தியில் எப்படி ஆட்சியமைக்க முடியும்? என தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை
தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத காங்கிரசால் மத்தியில் எப்படி ஆட்சியமைக்க முடியும்?
கோடநாடு விவகாரத்தில் மத்தியஅரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டை திமுக கூறுகிறது. திமுக எதை எடுத்தாலும் பாஜக மீது குற்றம்சாட்டினால் மக்களுக்கு சலித்துப்போகும். மத்தியஅரசின் மீது குறை சொன்னால் மக்களே நம்பமாட்டார்கள்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் இணைவோம் என தமிழிசை கூறினார்.
Related Tags :
Next Story