சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக நடக்காதவர்கள், கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள் -பொன்.ராதாகிருஷ்ணன்


சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக நடக்காதவர்கள், கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள் -பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 16 Jan 2019 12:05 PM GMT (Updated: 16 Jan 2019 12:05 PM GMT)

சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக நடக்காதவர்கள், கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து உள்ளார்.

சென்னை,

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக செயல்படாதவர்கள், கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைத்ததால் கிராமசபை கூட்டத்தை திமுக நடத்துகிறது.

பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற பயிற்சி எடுத்து வருபவர்களுக்கு வாழ்த்துகள்.

கோடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. அது இப்போது வெளிவர வேண்டிய அவசியம் என்ன? கோடநாடு விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பின்னணியில் யார் என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story