மக்களவை தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடக்கிறது -டிடிவி தினகரன்
மக்களவை தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசிவருவதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம்
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சில மாநிலக் கட்சிகளிடம் பேசி வருவதாகவும், கூட்டணி அமையவில்லை என்றால், அமமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-
கோடநாடு சர்ச்சை விவகாரத்தில் குற்றம்சாட்டிய 2 பேர் மீது அவசர அவசரமாக கைது நடவடிக்கை எடுத்தது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
அதிமுகவும் திமுகவும் தொடர்பில் இருப்பதாகவும், அதனால்தான் திமுக எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஜெயக்குமாருக்கு தெரிந்திருக்கிறது.
திமுக எம்எல்ஏக்கள் கேட்கிற காண்ட்ராக்ட் வழங்கப்படுவதாகவும், ஜெயக்குமார் வாயாலேயே உண்மை வெளிவந்து விட்டது.
கொடநாடு கொலை, கொள்ளையில் எடப்பாடிக்கு தொடர்பு இருக்கும்போல் தெரிகிறது. விரைவில் உண்மை தெரியவரும் என கூறினார்.
Related Tags :
Next Story