விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் -இஸ்ரோ சிவன்


விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் -இஸ்ரோ சிவன்
x
தினத்தந்தி 18 Jan 2019 9:28 AM GMT (Updated: 18 Jan 2019 9:28 AM GMT)

விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை

இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

இளம் அறிவியலாளர்களை உருவாக்கி, ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விண்வெளித்துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.

விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும். பிஎஸ்எல்வி ராக்கெட்டை தொழிற்துறையினர் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கூறினார்.

Next Story