ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்
ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல கோடி ரூபாய் செலவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை எனக்கூறி, வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
Related Tags :
Next Story