துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியது தவறு அல்ல எச். ராஜா


துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியது தவறு அல்ல எச். ராஜா
x
தினத்தந்தி 23 Jan 2019 1:48 PM GMT (Updated: 23 Jan 2019 1:48 PM GMT)

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியது தவறு அல்ல என பாஜக தேசியச் செயலர் எச். ராஜா கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்த நந்திவரத்தில் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார். 

லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது விழா நிகழ்ச்சியில் தேசத்திற்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டதாகவும், அந்த விழாவில் சகாயம் ஐஏஎஸ் பங்கேற்றது தவறு என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

இந்துக் கடவுள்கள் விமர்சிக்கப்பட்டதை கேள்வி கேட்காதவர்கள், ஓ.பன்னீர்செல்வம் நடத்திய யாகத்தை கேள்வி கேட்கக்கூடாது என்ற அவர், ஐஏஎஸ் சகாயம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story