ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ
ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
மதுரை,
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"போராட்டத்தில் ஈடுபட்டதாக கைதான 1,115 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும். சிறையில் இருக்கும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை விடுவிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோரிடம் காவல்துறை கடுமையாக நடந்து கொள்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும். அரசின் நிலைப்பாட்டால் தான் போராட்டம் தொடர்கிறது.
ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடரும், நாளை முதல் வட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும்.
பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்" என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story