அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரின் சம்பளம் நிறுத்தி வைப்பு; வங்கிகள் தகவல்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரின் சம்பளம் நிறுத்தி வைப்பு; வங்கிகள் தகவல்
x
தினத்தந்தி 30 Jan 2019 5:28 AM GMT (Updated: 30 Jan 2019 5:28 AM GMT)

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளம் நிறுத்தி வைக்கப்படுகிறது என வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளன.

சென்னை,

ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 22ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தினால் அரசு பணிகள் மற்றும் கல்வி பணிகள் பாதிப்படைந்து உள்ளன.  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால், எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளம் நிறுத்தி வைக்கப்படுகிறது என வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளன.

அரசின் உத்தரவின் பெயரில் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என வங்கிகள் தெரிவித்து உள்ளன.  இதனை தொடர்ந்து கருவூலத்திற்கு வங்கிகள் தகவல் தெரிவித்து உள்ளன.

Next Story