கோடநாடு விவகாரம் : முதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு விதித்த தடை நீட்டிப்பு -சென்னை ஐகோர்ட்


கோடநாடு விவகாரம் : முதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு விதித்த தடை நீட்டிப்பு -சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 31 Jan 2019 7:56 AM GMT (Updated: 31 Jan 2019 7:56 AM GMT)

கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நீட்டித்து உள்ளது. #KodanadIssue

சென்னை

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது அ.தி.மு.க ஐடி பிரிவு நிர்வாகி சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலீசில் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வீடியோ விவகாரத்தில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு 4 வாரம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் குறித்து பேச  மேத்யூ சாமுவேலுக்கு  தடை விதிக்கப்பட்டு இருந்தது.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எதிர் மனுதாரர் சயானுக்கு நோட்டீஸ் சென்றடையாததால் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார் நீதிபதி கல்யாணசுந்தரம்.

கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு விதித்த தடையை சென்னை ஐகோர்ட்  நீட்டித்து உள்ளது.

Next Story